அமெரிக்காவை சூழும் யுத்த மேகம்!
மீரா ஷங்கர் அவமதிப்புக்கு பின் கூடிய மத்திய அமைச்சரவையில் அமெரிக்க வை கண்டித்து கண்டன தீர்மானமும் யுத்த கால அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே sharukh கான், பிரபுல் படேல், ஜார்ஜ் பெர்னாண்டஸ், அப்துல் கலாம் ... ஆகியோருக்கு டவுசரை கழட்டிய அமெரிக்க விமான நிலையங்களின் அத்துமீறிய சம்பவங்கள் வரிசையில் , இப்போது அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சொதனயிடப்பட்டுள்ள சம்பவம் இந்தியாவை கொதிப்படைய செய்துள்ளது. இந்திய வில் வீதிகள் தோரும் மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம், போராட்டம், ரயில் மறியல், பஸ் மறியல், அமெரிக்க தூதரகங்களை கொளுத்துதல் , இந்தியாவுக்கான அமெரிக்க தூதர்களின் டவுசர்களை கழட்டுதல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்திய அரசோ பல படிகள் மேலே பொய் அமெரிக்காவுக்கு எதிரான யுத்தத்தை அறிவித்துள்ளது . "ஒபாமா நிர்வாகம் இந்த சம்பவத்துக்காக உடனடியாக மீரா வின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் யுத்தம் உடனடியாக துவங்கும் என்று அறிவித்துள்ளது. பசிபிக் கடல் பிராந்தியத்தில் இந்திய போர்க்கப்பல்கள் முகாமிட்டுள்ளன , மிக் 2010 ரக போர் விமானங்களும், அக்குனி அமுக்குணி ரக ஏவுகணைகளும் ஒபாமா வீட்டை குறிவைத்து மன்மோகன் வீட்டு மொட்டை மாடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன . மென்மையான பிரதமர் என்று பெயரெடுத்த மன்மோஹனே பொறுமையிழக்கும் வகையில் அமெரிக்க நடந்து கொண்டதை பார்த்து இஸ்ரேல், சௌதி அரேபியா போன்ற நாடுகளே அதிர்ச்சி அடைந்துள்ளன . இந்தியாவின் பலம் தெரியாமல் தவறு செய்துவிட்டு அமெரிக்க இப்போது ஆப்பசைத்த குரங்காக முழிப்பதாக சில நட்பு நாடுகள் கவலை அடைந்துள்ளன . மீராவுக்கு நேர்ந்த அவமதிப்பை கேள்விப்பட்டதும் மன்மோகன், சோனியாவின் கண்கள், இரண்டாம் உலகப்போர் சமயத்தில் சிவந்த ஸ்டாலினின் கண்கள் போலவும், கிரான்மா தாக்குதலின் போது சிவந்த பிடெல் காஸ்ட்ரோவின் கண்களை ஒத்திருந்ததாகவும் விபரமறிந்தவர்கள் சொல்கிறார்கள். நிலைமை கைமீரிப்போவதை உணர்ந்த ஒபாமா , சதாம் போல தனக்கும் பதுங்கு குழிகளை தோண்ட சொல்லி இருப்பதாகவும், ஆனால் அமெரிக்க அதிகாரிகள் அத்தகைய குழிகளை வடகொரியாவுக்கு பயந்து நாம் ஏற்கனவே தயார் நிலையில் வைத்துள்ளோம் என்று கூறியுள்ளனர் . இத்தகைய சூழலில் ஒரு சமாதான முயற்சியாக , அமெரிக்க விமான நிலையத்தில் கழட்டப்பட்டு , இன்று வரை ஒரு ரசிகரால் பயன்படுத்தப்பட்டுவரும் ஷாருக்கின் டவுசரை மீண்டும் ஒப்படைத்து விடுவதாக அமெரிக்க வெளியுறவு துறை இந்திய விடம் மேற்கொண்ட பேச்சு வார்த்தை பலனளிக்கவில்லை .