சலனம்
நீர்மட்டத்தில்
மேல் நிற்கிறீர்கள்
தாமரை இலைகளில்
துளிகள் உருள்வதை
காண்கிறீர்கள்
......நீர்
உங்களையும் பிரதிபலிக்கிறது
மகிழ்கிறீர்கள் !
ஆழத்தில்
.................
வேர்கள் சிக்குண்டு
ஒரு மரணத்தை
சம்பவிக்க காத்துக்கொண்டிருக்கலாம்
வலை பின்னல்
கட்டுமரங்கள் ஆழ்கடலில் செல்வதில்லை
நாட்டுப்படகால் கடல் தாண்ட முடியாது
மீனவனை கொல்வதில் நீதியொன்றும் இல்லை
விசைப்படகால்,
லாபவெறியால்,
விளைந்தவைதான் எல்லாம்.
கடலாடுபவன் துயரம்
கரையாளன் அறிவதில்லை
காற்றை அழித்தோம்
கடலை அழித்தோம்
வனத்தை அழித்தோம்
நாமே அழிந்தோம் .