முள்ளிவாய்க்கால் 2009
Shareமுள்ளிவாய்க்கால் 2009
சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம்
அல்லது
தற்கொலை செய்தவனின் மீது சுடப்பட்டிருக்கலாம்
தப்பியோடும் போது பின்னாலிருந்து கொன்றிருக்கலாம்
அன்றேல்
கூட இருந்தவன் சாகடிப்பதற்கும் சாத்தியங்கள் உண்டு
சரணடைந்தவன் மீது வன்மம் வெறியாய்க் கொன்டவனொருவன்
கண்ணிமைக்கும் பொழுதுக்குள்
தன் துவக்கின் வில்லை இழுத்திருக்கலாம்
கைதின் பின் முரண்டுபிடித்திருக்கவும்
அவனைச் சித்திரவதை செய்திருக்கவும்
பின் அடித்துத் கொல்லவும் வாய்ப்புண்டு
துப்பாக்கிக்குப் பதிலாக கோடரி அல்லது வேறு கூரிய கருவியால்
கபாலத்தைப் பிளந்திருக்கும் அநாகரிகம் எதிரியிடமும் உண்டு
தப்பியோட
அவன் சாயல் கொண்ட வேறொருவனின் பிணம் கூட
இவனாகச் சித்தரிக்கபட்டிருக்கலாம்
எல்லாவித சாத்தியப்பாடுகளோடும்
திரை விழுகிறது
மேடையில் கட்டியக்காரன் கும்மாளமிடுகிறான்
‘கூத்து முடிந்தது’
இரத்த வெடிலில் கிடந்து தகிக்கிறது கூத்துக்களரி
மகிழ்வா? துயரா? யாருக்கும் தெரியவில்லை
எல்லோர் விழிகளும் நீரால் வழிகிறது
இருள் இன்னும் கலையவில்லை
நன்றி:'எதுவரை'
சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம்
அல்லது
தற்கொலை செய்தவனின் மீது சுடப்பட்டிருக்கலாம்
தப்பியோடும் போது பின்னாலிருந்து கொன்றிருக்கலாம்
அன்றேல்
கூட இருந்தவன் சாகடிப்பதற்கும் சாத்தியங்கள் உண்டு
சரணடைந்தவன் மீது வன்மம் வெறியாய்க் கொன்டவனொருவன்
கண்ணிமைக்கும் பொழுதுக்குள்
தன் துவக்கின் வில்லை இழுத்திருக்கலாம்
கைதின் பின் முரண்டுபிடித்திருக்கவும்
அவனைச் சித்திரவதை செய்திருக்கவும்
பின் அடித்துத் கொல்லவும் வாய்ப்புண்டு
துப்பாக்கிக்குப் பதிலாக கோடரி அல்லது வேறு கூரிய கருவியால்
கபாலத்தைப் பிளந்திருக்கும் அநாகரிகம் எதிரியிடமும் உண்டு
தப்பியோட
அவன் சாயல் கொண்ட வேறொருவனின் பிணம் கூட
இவனாகச் சித்தரிக்கபட்டிருக்கலாம்
எல்லாவித சாத்தியப்பாடுகளோடும்
திரை விழுகிறது
மேடையில் கட்டியக்காரன் கும்மாளமிடுகிறான்
‘கூத்து முடிந்தது’
இரத்த வெடிலில் கிடந்து தகிக்கிறது கூத்துக்களரி
மகிழ்வா? துயரா? யாருக்கும் தெரியவில்லை
எல்லோர் விழிகளும் நீரால் வழிகிறது
இருள் இன்னும் கலையவில்லை
நன்றி:'எதுவரை'
No comments:
Post a Comment