ஒரு கம்யுனிஸ்டின் கதை
ஜூல்பிகர் அலி பூட்டோ
நகர கம்யுனிஸ்டின் பொறுப்பில் இருந்தான்
அவனொரு நடைபாதை வியாபாரி
செகுவேராவையோ
மாவோவையோ
மூலதனத்தையோ பற்றி அவன் அறிந்திருக்கவில்லை
என்பதை காட்டிலும்
இவற்றின் இருப்பு குறித்தே அவனுக்கு தெரியாது
கான்ஸ்டபில் மருதாச்சலத்தின் மிரட்டலையும்
வாராந்திரம் தண்டமழும் மாமூலையும்
சரிப்படுத்தவே அவன் கம்யுனிஸ்ட் ஆனான்
பிரச்சனைகள் தீர்ந்துவிட்ட பிறகும்
அவன் கம்யுனிஸ்ட்ட்டாகவே அறியப்பட்டான்
நான்கைந்து ஆர்ப்பாட்டங்களில்
நரம்பு புடைக்ககத்தி
நகரப்போறுப்பை அடைந்தான்
ஆனாலும் அவனுக்கு
இன்குலாப் ஜிந்தாபாத் என்பதற்கு மட்டும்
அர்த்தம் தெரியும்
அதுவும் பழைய மருதாசலம்
யதேட்சையாய் கேட்கப்போக
பக்கத்திலிருந்த தோழரிடம்
கேட்டு ச்சொன்னபோதுதான்
-சிநேகிதன்
(என்சௌண்டேர் செய்யப்படுவதற்கு சற்று முன்பு தேநீர் குடித்துக்கொண்டிருந்தேன் )
....... கவிதை தொகுப்பிலிருந்து
No comments:
Post a Comment